'தி.மு.க.வையும், மதுரையையும் பிரிக்க முடியாது' - கமல்ஹாசன்


தி.மு.க.வையும், மதுரையையும் பிரிக்க முடியாது - கமல்ஹாசன்
x

மதுரையை ஒரு பெரிய நகரமாக மாற்றிய பெருமை கலைஞர் கருணாநிதியைச் சேரும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"மதுரையை ஒரு பெரிய நகரமாக மாற்றிய பெருமை கலைஞர் கருணாநிதியைச் சேரும். மதுரையை மாநகராட்சியாக அவர் உயர்த்தினார். உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் தொடங்கி வைத்தார். புகழ்மிக்க பாலங்கள் மதுரையை ஒரு நவீன நகரமாக மாற்றியது என்றால் மிகையாகாது.

மதுரையில் கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் என பல்வேறு திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். கீழடியில் இருந்த கலாச்சாரம் வெறும் தமிழர்களின் கலாச்சாரம் மட்டுமல்ல. அது மனிதர்களின் கலாச்சாரம். அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

தி.மு.க.வையும், மதுரையையும் பிரிக்க முடியாது. தொண்டு செய்தவர்களையும், மக்களையும் பிரிக்க முடியாது. நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைக்க வேண்டும். நம்மை பிரிப்பதற்கு பல சக்திகள் இருக்கின்றன. கல்விதான் நம் பலம்."

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.




Next Story