கல்வி என்பது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி - திரவுபதி முர்மு


கல்வி  என்பது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி - திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 8 Aug 2024 11:57 PM GMT (Updated: 9 Aug 2024 1:11 AM GMT)

ஜனாதிபதி திரவுபதி முா்மு மற்றும் நியூசிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்சன் ஆகியோா் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினா்.

வெலிங்டன்,

ஜனாதிபதி திரவுபதி முா்மு தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நேற்று நியூசிலாந்து வந்தடைந்தாா். வருகையின்போது அவருக்கு நியூஸிலாந்தின் 'ராயல் காா்டு ஆப் ஹானா்' வழங்கப்பட்டது.

நியூசிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்சனை முா்மு சந்தித்தாா். கல்வி, வா்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினா்.

இதனிடையே, வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து சா்வதேச கல்வி மாநாட்டில் முா்மு கலந்துகொண்டு உரையாற்றினாா். அப்போது, 'கல்வி என்பது ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்துக்கானது மட்டுமல்ல, அது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகும். நியூசிலாந்தில் சா்வதேச மாணவா்களில், இரண்டாவது அதிக எண்ணிக்கையில் 8,000 இந்திய மாணவா்கள் நியூசிலாந்தில் தரமான கல்வியைப் பெற்று வருகின்றனா் என்றாா்.


Next Story