'தமிழ்நாட்டின் போட்டி நாடுகளோடுதான், மாநிலங்களோடு அல்ல...' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா


தமிழ்நாட்டின் போட்டி நாடுகளோடுதான், மாநிலங்களோடு அல்ல... - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
x

தமிழ்நாட்டின் போட்டி வெளிநாடுகளோடுதான் என்றும், பிற மாநிலங்களோடு அல்ல என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகள்தான் போட்டியாக உள்ளன என்று தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால், நமக்கு போட்டி எல்லாம் வெளிநாடுகள்தான். இரண்டு வெளிநாடுகளுடன் போட்டியிட்டு ஒரு புதிய திட்டத்தை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கான வேலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். நமது போட்டி நாடுகளோதான், மாநிலங்களோடு அல்ல. ஏனெனில் நமது உயரம் அந்த அளவில் இருக்கிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Next Story