ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மந்திரி ராஜினாமா செய்யவேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மந்திரி ராஜினாமா செய்யவேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x
தினத்தந்தி 18 Jun 2024 10:01 AM GMT (Updated: 18 Jun 2024 12:03 PM GMT)

மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மேற்கு வங்காள மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு ரெயில் விபத்துகள் நாட்டில் நடந்துள்ளன. இதற்கு மத்திய அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியப்போக்கே காரணம்.

நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடி, முறைகேடு ஆகியவை மாணவர்களின் வாழ்க்கை யோடு, எதிர்காலத்தோடு விளையாடுவதாக உள்ளது. எனவே மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் போலீசார் முன்னிலையிலேயே தாக்கப்பட்டது. அங்கிருந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எனவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story