ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம் என்றவர் ஜான் மார்ஷல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம் என்றவர் ஜான் மார்ஷல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Sep 2024 3:23 AM GMT (Updated: 20 Sep 2024 3:45 AM GMT)

ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம் என்று சொன்னவர் ஜான் மார்ஷல் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் அவர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பை நன்றிப்பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.

சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தினார். திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி என நூறாண்டுக்கு முன் உலகிற்கு சொன்னவர் ஜான் மார்ஷல்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டினை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர் ஜான் மார்ஷல் அவர்களின் முழுவுருவச் சிலையினைத் தமிழ்நாட்டில் நிறுவியும் கொண்டாடப்படும் என எனது அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story