அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக புகார்


அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக புகார்
x
தினத்தந்தி 29 Aug 2024 2:29 PM GMT (Updated: 29 Aug 2024 2:35 PM GMT)

அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அண்ணாமலை உருவப்பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"எதிர்க்கட்சித் தலைவர்களை இழிவாக பேசி அதன் மூலம் விளம்பரம் தேடும் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை பற்றி சட்டத்திற்கு புறம்பான, கடுமையான வார்த்தைகளால் பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது? என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டி. அறிவரசன் தெரிவித்துள்ளார்.


Next Story