திருமண ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
வில்லியனூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே அரியூர் சிவரந்தகம் சாலை பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாபு (வயது 42). கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்து வந்தவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மேலும் மனநலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire