தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருபுவனை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருபுவனை

திருபுவனையை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம் வி.வி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 47). கூலித்தொழிலாளி. அவரது மனைவி பிரேமாவதி (44). கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் பிரேமாவதி கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சம்பத்குமார் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கேபிள் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story