தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2023 4:08 PM GMT (Updated: 6 Aug 2023 4:13 PM GMT)

திரு-பட்டினம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார்.

திரு-பட்டினம்

காரைக்கால் தோமாஸ் அருள்வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஜான்மேடோன் (வயது 28). தொழிலாளி. இவர், திரு-பட்டினம் முதலிமேடு பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழும் பிரவீனா (29) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பிரவீனாவுக்கு முதல் கணவர் மூலம் 2 பிள்ளைகள் உள்ள நிலையில், ஜான்மேடோன் மூலம் மேலும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் குழந்தைகளுடன், பிரவீனா யாரிடமும் சொல்லாமல் எங்கேயோ சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் ஜான்மேடோன் காணப்பட்டார். இந்தநிலையில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று ஜான்மேடோன் இறந்துபோனார்.

இது குறித்த புகாரின்பேரில் திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story