குறைதீர்க்கும் கூட்டத்தில் கதறி அழுத பெண் - கட்டித் தழுவி ஆறுதல் கூறிய தமிழிசை சவுந்தரராஜன்


குறைதீர்க்கும் கூட்டத்தில் கதறி அழுத பெண் - கட்டித் தழுவி ஆறுதல் கூறிய தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 15 Feb 2023 5:17 PM GMT (Updated: 15 Feb 2023 5:21 PM GMT)

தனது குறைகளைக் கூறி கதறி அழுத பெண்ணுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கட்டித் தழுவி ஆறுதல் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண், தனக்கு சொந்தமான நிலத்தை தனது குடும்பத்தில் உள்ளவர்களே போலியாக பதிவு செய்ததாகவும், அதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவை தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்ட நிலையில், அந்த பெண் தனது குறைகளைக் கூறி கதறி அழுதார். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் அந்த பெண்ணை கட்டித் தழுவி ஆறுதல் கூறினார்.




Next Story