தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
கோட்டுச்சேரி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா நிவாரணம் வழங்கினார்.
கோட்டுச்சேரி
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட கோட்டுச்சேரி முக்கூட்டு ஆலமரம் பகுதியில் உள்ள வீடு ஒன்று தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சர் சந்திரபிரியங்கா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் ரூ.50 ஆயிரத்துக்கான நிதியுதவியை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) மதன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story