ரூ.5 லட்சம் மதிப்பிலான எரி சாராயம் பறிமுதல்


ரூ.5 லட்சம் மதிப்பிலான எரி சாராயம் பறிமுதல்
x

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில் கடத்தல்

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுபாட்டில்கள், சாராயம் கடத்தப்படுகிறது. இதை தடுக்க கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில் தாசில்தார் சிதம்பரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வில்லியனூர் அருகே கூனிமுடுக்கு பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

47 கேன்களில் எரிசாராயம்

அங்கு 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 47 கேன்களில் எரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் ஏழுமலையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story