மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி


மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி
x

புதுவை கொம்பாக்கத்தில் குடும்ப தகராறில் மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

கொம்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 45), தொழிலாளி. இவரது மனைவி கல்விக்கரசி (38). இவர்களது மகன் வசந்தராஜா, சம்பவத்தன்று அருண்குமார் தனது மனைவி மீது சந்தேகமடைந்து அவரை தாக்கினார். இதனை தடுக்க சென்ற மகன் வசந்தராஜாவையும் அவர் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் அருண்குமார் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story