திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஐ.ஜி. சந்திரன் சாமி தரிசனம்
திருநள்ளாறு
புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன் இன்று காரைக்கால் வந்தார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியம், நிதின் கவுஹால் ரமேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து அவர் போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தனது மனைவி உமா மகேஸ்வரி, பேரன் சாத்விக் (3) அகியோருடன் ஐ.ஜி. சந்திரன் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 360-வது இடமும், புதுச்சேரியில் முதலிடமும் பெற்ற தனது மகள் டாக்டர் வினோதினி பார்த்திபன் பெயரில் எள்தீபம் ஏற்றியும் வழிபட்டார்.
Related Tags :
Next Story