புதுச்சேரியில் 'குஜராத் மாடல்' டயாலிசிஸ் முறை - அதிகாரிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு


புதுச்சேரியில் குஜராத் மாடல் டயாலிசிஸ் முறை - அதிகாரிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
x

குஜராத் மாடல் டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜு வர்மா, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் குஜராத் சிறுநீரக நோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், வெற்றிகரமாக நடைபெற்று வரும் குஜராத் மாடல் டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போது இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு இதனை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்கால் பகுதிகளிலும் இதை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.


Next Story