'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்


நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்
x

முத்தியால்பேட்டையில் ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் 40 நாட்களுக்கு நடை்பெற உள்ளது.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை தொகுதியில் ஜெயமாருதி கல்வி அகாடமியின் உரிமையாளர் ஆதி நாராயணன், ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச நீட் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா இன்று நடந்தது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் தலைமை தாங்கி பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி.சந்திரன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் கோவிந்தசாமி, மின்னணுவியல் மற்றும் கருவியல்துறை இணை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முருகபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்புகள் 40 நாட்கள் நடைபெற உள்ளது.


Next Story