மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரிக்கு மத்திய மீன்வளத்துறை மந்திரி கடந்த 8-ந் தேதி வருகை தந்தார். தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்த மீனவர் கூட்டத்தை சரிவர நடத்தவில்லை என்ற மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த கூட்டத்தில் மீனவர்கள் புறக்கணிப்பட்டதை கண்டித்து மீன்பிடி துறைமுக நுழைவு வாயிலில் நேற்று அனைத்து மீனவ அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மீனவ அமைப்புகளின் சார்பாக தீபா சுப்ரமணியன், உத்திராண்டன், புகழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் புதுவையில் உள்ள பல்வேறு மீனவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மீன்வளத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story