பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

புதுவை லாஸ்பேட்டையில் தூக்குப்போட்டு பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுவை லாஸ்பேட்டையில் தூக்குப்போட்டு பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

பெண் டாக்டர்

புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளைத்தோட்டம் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் டாக்டர் கோவிந்தராஜன் (வயது 59). இவர் அரசு மார்பக நோய் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (57). இவர் லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.ஒரு மகள். அவர் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

தற்கொலை

உடல் நலக்குறைவு காரணமாக டாக்டர் சாந்தி மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே, சாந்தி அவரது கணவரிடம் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தன்னை கவனித்துக்கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் விருப்ப ஓய்வு பெறாமல் தொடர்ந்து பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சாந்தி மிகவும் விரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சாந்தி, இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story