மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி


மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி
x

கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

புதுச்சேரி

கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி(கேப்) சார்பில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 8-ந் தேதி வரை நடக்கிறது.

இதேபோல் பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட், வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோர்களுக்கான கிரிக்கெட், அமர்வு சக்கர நாற்காலி கிரிகெட் என தனித்தனி பிரிவுகளில் விரைவில் 20 ஓவர் போட்டிகளை கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி நடத்த உள்ளது. புதுவையில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கேப் அமைப்பு தொடர்ந்து செயல்படும்.

இந்த தகவலை கேப் அமைப்பின் கவுரவ செயலாளர் சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story