கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்
புதுவையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி
கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், கோவில் நிலத்தை தங்களது குடும்பத்தினர் பெயருக்கு மாற்றி எழுதிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் புதுவை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை ஒருங்கிணைப்பாளர் ராசாராம் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி செயலாளர் சிவக்குமார், தமிழர் களம் தலைவர் அழகர், நாம் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் ரமேஷ், அகில இந்திய மனித உரிமைகள் மோகனசுந்தரம், புதுவை மாநில விஸ்வகர்மா மகாஜன சங்க தலைவர் சண்முகம், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கழக பொதுச்செயலாளர் முருகானந்தம், தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story