சாலையோர பேனர்களை அகற்ற கோரிக்கை


சாலையோர பேனர்களை அகற்ற கோரிக்கை
x

பலத்த காற்று வீசுவதால் விபத்து அபாயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் சாலையோர பேனா்களை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாகூர்

கிருமாம்பாக்கம், காட்டுக்குப்பம், கன்னியக்கோவில் முள்ளோடை, பாகூர், சேலியமேடு, குருவிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் புதுச்சேரி - கடலூர் நெடுஞ்சாலையில் கிருமாம்பாக்கம் பகுதியில் மரக்கிளைகள் நீட்டிக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிந்து தொங்கியது. ஒருசில இடங்களில் பேனர்கள் விழும் நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் பலத்த காற்றில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

தற்போது தென்மேற்கு பருவமழை பலத்த காற்றுடன் பெய்து வருவதால் சாலையோர வைத்துள்ள பேனர்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக பேனர்கள், கட்-அவுட்களை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story