மேலும் 7 பேருக்கு கொரோனா


மேலும் 7 பேருக்கு கொரோனா
x

புதுவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 469 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்தனர். தற்போது 31 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 15 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 123 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 184 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 22 லட்சத்து 58 ஆயிரத்து 514 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story