மேலும் 4 பேருக்கு கொரோனா


மேலும் 4 பேருக்கு கொரோனா
x

புதுவையில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ள நிலையில் 29 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,220 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது புதுச்சேரியில் 13 பேர், ஏனாமில் 16 பேர் என 29 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 91 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 572 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 111 பேரும் செலுத்திக்கொண்டனர்.


Next Story