பாரதிதாசன் அரசுப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா
புதுவை அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரி புராணசிங்கு பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக என்.ஆர். இலக்கியப் பேரவை தலைவர் கே.தனசேகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். பாடகர் வேணு செல்வம் விழிப்புணர்வு பாடல்களை பாடினார். நிகழ்ச்சியில் விரிவுரையாளர் மாயவன், ரஷீத், பழனிவேல், கருணை ஞானப்பிரகாசம், முருகானந்தம், அஜித் குமார், கிருபாகரன் மற்றும் மாணவர்கள்-பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில விரிவுரையாளர் தியோடர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story