சிறுவன், சிறுமி திடீர் சாவு


சிறுவன், சிறுமி திடீர் சாவு
x

புதுவையில் வெவ்வேறு இடங்களில் சிறுவர்கள் 2 போ் உயிரிழந்தனர்

புதுச்சேரி

புதுவை புதுசாரத்தை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் மோகன்ராஜ் (வயழ 8). இவன் நேற்று வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்தான். அவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலியார்பேட்டை இந்திரா நகர் தயானந்த வீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 49). இவரது மகள் சஞ்சனா (3). இவள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சஞ்சனா பேச்சு மூச்சின்றி இருந்தாள்.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூச்சுத்திணறல் காரணமாக அவள் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story