சட்டசபை அருகே பாசிக் ஊழியர்கள் தர்ணா
புதுச்சேரி பாசிக் ஊழியர்கள் தங்களுக்கு 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி சட்டசபை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுச்சேரி பாசிக் ஊழியர்கள் தங்களுக்கு 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை வளாகத்திற்கு அருகில் உள்ள மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் பாசிக் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தாராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story