கணவன், மனைவி உள்பட 4 பேரை தாக்கி கொலைமிரட்டல்


கணவன், மனைவி உள்பட 4 பேரை தாக்கி கொலைமிரட்டல்
x

போலீசில் புகார் செய்ததால் கணவன்,மனைவி உள்பட 4 பேரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி

வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். மீனவர். இவரது படகு என்ஜீனில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், சுந்தரமூர்த்தி, செல்வமுருகன் ஆகியோர் சர்க்கரை, கருங்கற்களை போட்டு சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து சந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்தநிலையில் சந்திரன் அவரது நண்பர்களான ராமராஜ், சண்முகம் ஆகியோருடன் சம்பவத்தன்று வம்பாகீரப்பாளையம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தர்ராஜ், சுந்தரமூர்த்தி, செல்வமுருகன் ஆகியோர் 'எங்கள் மீது போலீசில் புகார் தெரிவிப்பாயா?' எனக்கேட்டு சந்திரனிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற சந்திரன் மனைவி பிரேமா, ராமராஜ், சண்முகம் ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சுந்தர்ராஜ் உள்பட 3 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story