கஞ்சா விற்ற தொழிலாளி கைது
முருங்கப்பாக்கத்தில் கஞ்சா விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை
முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் முருங்கப்பாக்கம் வில்லியனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்ட உடன் ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஜான் ஸ்டீபன்ராஜ் (வயது 30) என்பதும் தொழிலாளியான இவர் வேலையில்லாத நாட்களில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story