சாராயம் குடித்த வாலிபர் சாவு


சாராயம் குடித்த வாலிபர் சாவு
x

மூலக்குளத்தில் அளவுக்கதிகமாக சாராயம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்.

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் அடுத்த சண்முகபுரம் திரு.வி.க. வீதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்த பாரதி (வயது 31). இவர் மேட்டுப் பாளையம் சாராய கடையில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சச்சிதானந்த பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story