கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x

புதுவையில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

புதுவையில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

புதுவையில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. கஞ்சாவை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் குண்டுப்பாளையம் விநாயகர் கோவில் அருகே சிலர் கஞ்சா விற்பதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

4 பேர் கைது

போலீசாரை கண்டதும் அங்கு நின்ற சிலர் நைசாக நழுவி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கிய போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திலகர் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது26), திலாசுப்பேட்டையை சேர்ந்த ரூபன் (25), கவுண்டன்பாளையம் சரவணன் (26), கோரிமேடு திருநகரை சேர்ந்த அஜித் (21) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் 3 செல்போன்கள், 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story