கணவன், மனைவியை தாக்கிய 3 பேர் கைது


கணவன், மனைவியை தாக்கிய 3 பேர் கைது
x

வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டுச்சேரி

வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொத்தனார்

நெடுங்காடு அய்யப்பன் நகர் எல்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 43). கொத்தனார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பாலச்சந்தர் (43) அங்கு வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்துவதால் தனது காரை எடுப்பதில் சிரமம் இருப்பதாக கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

3 பேர் கைது

இதில் ஆத்திரமடைந்து பாலச்சந்தர் மற்றும் அவரது உறவினர்கள் சிலம்பரசன் (32), ஈஸ்வரமூர்த்தி (24) ஆகியோர் கஜேந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க வந்த அவரது மனைவி உஷாவும் தாக்கப்பட்டார். மேலும் கஜேந்திரனின் மோட்டார் சைக்கிளையும் அவர்கள் கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தினர். காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து நெடுங்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்தர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.


Next Story