ஆட்டோவிற்கு காத்திருந்தவர்கள் மீது வேன் மோதி விபத்து - பெண் பலி


ஆட்டோவிற்கு காத்திருந்தவர்கள் மீது வேன் மோதி விபத்து - பெண் பலி
x
தினத்தந்தி 3 July 2024 1:39 AM GMT (Updated: 3 July 2024 1:51 AM GMT)

ஆட்டோவிற்கு காத்திருந்தவர்கள் மீது வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் உயிரிழந்தார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகர் மாவட்டம் ருத்ரபூரில் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 6 பெண்கள் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு செல்ல புறப்பட்டனர்.

தொழிற்சாலைக்கு வெளியே உள்ள சாலையில் ஆட்டோவிற்காக காத்திருந்தபோது சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த வேன் 6 பெண்கள் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 5 பெண்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story