வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால்... ... விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
Daily Thanthi 2024-07-13 02:41:22.0

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் ஓட்டு எண்ணி முடித்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது.


Next Story