‘மாநில அரசுகளின் அலட்சியமே நிலச்சரிவுக்கு காரணம்’... ... வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு
Daily Thanthi 2024-08-02 16:39:55.0

‘மாநில அரசுகளின் அலட்சியமே நிலச்சரிவுக்கு காரணம்’ - ராஜீவ் சந்திரசேகர்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் கேரள மாநிலத்தை 2009-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த மாநில அரசுகளே காரணம் என முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வயநாட்டில் நடந்தது ஒரு சோகம் அல்ல, அது ஒரு குற்றச்செயல்’ என்று குறிப்பிட்டார். மேலும் அங்கு அலட்சியம் நடந்துள்ளது என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் கூறினார். 


Next Story