நிலச்சரிவில் உயிரிழந்த 199 பேரின் உடல்களுக்கு... ... வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு
Daily Thanthi 2024-08-02 09:01:55.0

நிலச்சரிவில் உயிரிழந்த 199 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவு - வீணா ஜார்ஜ்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 199 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஐ.சி.யூ.க்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 130 உடல் பாகங்களின் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய தேசிய, சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 


Next Story