வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருக்கிறார்கள்- ஜெய்சங்கர்
வங்காளதேச நிலவரம் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-
நமது தூதரகங்கள் மூலம் வங்காளதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். அங்கு 9000 மாணவர்கள் உள்ளிட்ட 19,000 இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலைமையை கண்காணித்து வருகிறோம். வங்காளதேச அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். இந்த சிக்கலான சூழ்நிலையில், எச்சரிக்கையாக இருக்குமாறு நமது எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story