தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதல் அமைச்சர்... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-04-19 03:50:55.0

தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்தார். வாக்களித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்து இருப்பது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு எடுத்த முடிவு. அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும். அதிமுக வேட்பாளர்கள் பற்றி அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும். தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.


Next Story