ரஷிய ஆயுத படகை தாக்கி, அழித்த உக்ரைனிய ஏவுகணைகள்
கீவ்,
ரஷியாவின் ஆயுதம், போர் வீரர்களை ஏற்றி சென்ற படகை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளன.
உக்ரைனுக்கு எதிரான தீவிர போரில் ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இதில், ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் ஒடிசா நகருக்கு தெற்கே அமைந்த பாம்பு தீவுக்கு (ஸ்மைனை தீவு) ரஷிய படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த படகை உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளன. அந்த படகில் வீரர்கள் இருந்துள்ளனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
இதனை ஒடிசா கவர்னர் மேக்சிம் மார்செனகோ தெரிவித்து உள்ளார். வேசிலி பெக் என பெயரிடப்பட்ட அந்த படகில் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் சாதனம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், ஏவுகணை தாக்குதலை முறியடிக்க அது தவறி விட்டது என உக்ரைனின் கடற்படை தளபதி தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி தளபதி தனது பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஷியாவின் கருங்கடல் பகுதியில் இந்த வேசிலி பெக் படகு பயணித்து வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். உக்ரைனின் இந்த தாக்குதலால் அதன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.