316 பேர் பலி  வயநாடு நிலச்சரிவில் இதுவரை 316 பேர்... ... வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு
Daily Thanthi 2024-08-02 02:13:33.0

316 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 300 பேர் மாயம் 

வயநாடு நிலச்சரிவில் சுமார் 300  பேர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.


Next Story