உங்கள் அன்புக்குரியவர்கள் மீது அக்கறை இருந்தால்... ... லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-14 06:59:41.0

உங்கள் அன்புக்குரியவர்கள் மீது அக்கறை இருந்தால் வெளியேறுங்கள் - பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் 6 மணி நேரம் கெடு

வடக்கு காசாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேறும்படி இஸ்ரேல் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் காசாவின் வடக்கு பகுதியில் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். 11 லட்சம் பேரை இடம்பெற இஸ்ரேல் அறிவுத்தியுள்ள நிலையில் வடக்கு காசாவில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், உங்கள் மீதும் உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் 6 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ அரபு மொழி செய்தித்தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வடக்கு காசா முனையின் பெட் ஹனுன் நகரில் இருந்து தெற்கு காசா முனையின் கான் யுனிஸ் நகருக்கு பாலஸ்தீனர்கள் பாதுகாப்பாக செல்வதை இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்கிறது. பெட் ஹனுன் நகரில் இருந்து கான் யுனிஸ் நகருக்கு செல்ல மக்கள் அல் பஹர், அல் டின் ஆகிய தெருக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் மீதும் உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கு காசா முனைக்கு சென்றுவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நேரப்படி தற்போது சரியாக 10 மணி ஆகிறது. இஸ்ரேலின் கெடு இந்திய நேரப்படி இன்று மாலை 6.30க்கு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story