விருது வழங்கிய மு.க. ஸ்டாலின்


விருது வழங்கிய மு.க. ஸ்டாலின்
Daily Thanthi 2024-09-17 13:17:31.0

தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி 'பேரறிஞர்'அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தி.மு.க.'முப்பெரும் விழா' சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தற்போது தொடங்கி உள்ளது. தி.மு.க. முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, கடந்த 1985ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு  வருகிறது.. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கவுரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர். இதன்படி பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.   . 


Next Story