உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய  தொழிலாளர்கள்... ... உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்  அனைவரும் பத்திரமாக மீட்பு
Daily Thanthi 2023-11-28 10:12:46.0

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் சற்று நேரத்தில் மீட்கப்பட உள்ளனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தியை அறிய ஒட்டு மொத்த தேசமும் ஆவலுடன் உள்ளது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் தாயார் இது குறித்து கூறியதாவது: எனது மகன் சிக்கி 17 நாட்கள் ஆகிவிட்டன. எனது மகன் வந்துவிட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். எனது மகனை கண்ணால் காணும் வரை இது எதையும் நான் நம்ப மாட்டேன்” என்றார். 


Next Story