நிபந்தனை ஜாமீனில் வெளிவருவது பெரிய சாதனை அல்ல- பாஜக


நிபந்தனை ஜாமீனில் வெளிவருவது பெரிய சாதனை அல்ல- பாஜக
x
Daily Thanthi 2024-09-13 07:21:04.0

கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியிருப்பதாவது:- கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. நிபந்தனை ஜாமீன் பெறுவது பெரிய சாதனை கிடையாது. விரைவில் கெஜ்ரிவால் தண்டிக்கப்படுவார். ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், மது கோடா ஆகியோர் முதல்வராக இருந்த போதே சிறை தண்டனை பெற்று பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

அதன்பிறகு மீண்டும் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றார்கள். இந்த பட்டியலில் கெஜ்ரிவாலும் தற்போது சேர்ந்துள்ளார். இதை கெஜ்ரிவால் மறந்துவிடக்கூடாது. கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளின் படி கெஜ்ரிவால் முதல் மந்திரியாக தனது கடமையை செய்ய முடியாது. பிறகு எதற்காக அவர் பதவியில் நீடிக்க வேண்டும். உடனடியாக கெஜ்ரிவால் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story