தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?


தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம் 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்து ரூ.51 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விலையும் மளமளவென சரிந்தது. விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 7-ந்தேதி ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை இந்த அளவுக்கு குறைந்து காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்திருந்த நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.51,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story