8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-23 17:12 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் (ஜூலை 23) நாளையும் (ஜூலை 24) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் இன்று பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்