இரவு 9 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 9 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-17 13:59 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுக்க நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பமும் கூட கணிசமாகக் குறைந்தது. ஆனாலும் தற்போது ஆங்காங்கே மழை பெய்தாலும் கூட வறண்ட வானிலையும் கூடிக் கொண்டிருக்கிறது. இதனால் வெப்பமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடைகாலம் மீண்டும் திரும்பியது போல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த சூழலில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இரவு 9 மணி வரை 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடலூர், நாமக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்