டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களின் வெற்றி பேரணி தொடக்கம்

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

Update: 2024-07-04 14:42 GMT

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

கடந்த ஜூன் 29-ஆம் தேதியே இறுதிப்போட்டி முடிவடைந்தாலும் பாரபடாஸ் நகரில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்புவது தாமதமான நிலையில் தற்போது இந்திய அணியின் வீரர்கள் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

மேலும் இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

இதனை தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வெற்றி பேரணியாக வலம் வருவார்கள் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து பேரணி நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இந்தியா..இந்தியா.. என விண்ணெதிர உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.மும்பையில் வெற்றிப்பேரணி நடைபெறும் மரைன் டிரைவ் பகுதியின் சாலைகளில் இரு புறமும் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய வீரர்களின் வெற்றி பேரணி தற்போது தொடங்கியுள்ளது. மும்பையின் மரன் டிரவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை இந்த பேரணி நடைபெற உள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்