பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2024-08-20 21:00 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 5.1 புள்ளிகளாக பதிவானது. அப்போது அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்