பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-08-25 23:59 GMT

லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கைபர் மாவட்டம் திரஹா பகுதியில் அந்நாட்டு ராணுவ வீவர்கள் நேற்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த கூடுதல் படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்