சென்னையில் மாநகர பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை அடையாறு பணிமனை அருகே எல்.பி. சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த பேருந்தில் 10 பயணிகள் இருந்த நிலையில், ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தினார்.பஸ்சில் இருந்த அனைவரும் சரியான நேரத்தில் வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.